மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மாநாடு, மன்மதலீலை படங்களைத் தொடர்ந்து நாகசைதன்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. தமிழ், தெலுங்கில் தயாராகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது டான், அயலான் படங்களைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படம் தமிழ் தெலுங்கில் தயாராகும் நிலையில் அடுத்தபடியாக வெங்கட்பிரபு இயக்கும் படமும் தமிழ் தெலுங்கில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.