துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'.
இப்படத்திற்காக எந்தவிதமான பத்திரிகையாளர் சந்திப்பு, இசை வெளியீடு உள்ளிட்ட எந்த பிரமோஷனையும் நடத்தவில்லை. ஒரு சில யூடியூப் சேனல்களுக்கு மட்டும் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி பேட்டிகளைக் கொடுத்து மற்றவர்களைப் புறக்கணித்தனர். இப்படத்திற்காக பத்திரிகையாளர் காட்சி வைக்கவும் விக்னேஷ் சிவன் விரும்பவில்லை என்று தகவல்.
ஆனால், படம் வெளியான பின் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துவிடக் கூடாதென இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலியும் படத்தின் நாயகியுமான நயன்தராவை தியேட்டருக்கு வரவழைத்து பிரமோஷன் செய்திருக்கிறார். நேற்று சென்னையில் உள்ள தேவி தியேட்டரில் ரசிகர்களை சந்திக்க நயன்தாரா, விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்றனர்.
நயன்தாரா இதுவரை தான் நடித்த எந்த ஒரு படத்திற்காகவும் பேட்டியும் கொடுத்ததில்லை, அவரது பட விழாக்களிலும் கலந்து கொண்டதில்லை. இந்தப் படம் தனது காதலர் படம் என்பதாலும் இந்தப் படம் வெற்றி பெற்றால்தான் அடுத்து அவர் அஜித்தை வைத்து இயக்கப் போகும் படத்திற்கு பெயர் வாங்க முடியும் என்பதாலும் காதலருக்காக இறங்கி வந்துள்ளார்.