மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பெங்களூரு : மொழி பிரச்னையை வைத்து அரசியல் தான் நடக்கிறது என்று பார்த்தால் இப்போது இதை வைத்து சினிமாவிலும் பிரச்னை கிளம்ப தொடங்கி உள்ளது. ஹிந்தி தொடர்பாக கன்னட நடிகர் கிச்சா சுதீப்பும், ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனும் பதிவிட்ட கருத்துக்கள் மோதல் போக்காக மாறி பேசு பொருளாகி உள்ளது.
சமீபகாலமாக எல்லா மொழிகளிலும் பான் இந்தியா படங்கள் உருவாகி வருகின்றன. ஒரு மொழியில் ஒரு படத்தை எடுத்துவிட்டு அதை பிற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டு கல்லா கட்டி வருகின்றனர். தமிழில் நான் ஈ படம் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமான கன்னட நடிகர் கிச்சா சுதீப் 'விக்ராந்த் ரோணா' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடுகிறது.