கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி விமர்சிக்கப்படுபவர் சமந்தா. அதற்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கை முக்கிய காரணமாக அமைந்துள்ளது. நாகசைதன்யாவைப் பிரிந்த பிறகு திடீர் திடீரென அவரை விமர்சிக்க ஒரு கூட்டம் கிளம்பி விடுகிறது. அவர்கள் நாகசைதன்யாவை எந்த விதத்திலும் விமர்சிப்பதில்லை.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென தத்துவார்த்தமாக ஒரு பதிவிட்டிருந்தார் சமந்தா. அதில், “என் மவுனத்தில் அறியாமைக்காக எப்போதும் தவறிழைக்காதே, என் அமைதி ஏற்றுக் கொள்வதற்கு, என் கருணை பலவீனத்திற்கு,” என்று குறிப்பிட்டிருந்தார். அடுத்து, “கருணைக்கு காலாவதி தேதி இருக்கலாம், சும்மா சொல்கிறேன்,” என பதிவிட்டிருந்தார்.
யாருக்கு, எதற்காக இப்படி சமந்தா பதிவிட்டுள்ளார் என்பது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.