வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
'பாகுபலி' படங்களின் மூலம் பான்-இந்தியா நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ' படம் ஹிந்தியில் மட்டுமே வெற்றி பெற்று மற்ற மொழிகளில் தோல்வியடைந்தது. அதற்கடுத்து பிரபாஸ் நடித்த 'ராதேஷ்யாம்' படம் கடந்த மாதம் வெளிவந்தது. அப்படம் ஹிந்தியில் கூட ஓடாமல் அனைத்து மொழிகளிலும் தோல்வியடைந்தது. மொத்தமாக 150 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் எனச் சொல்கிறார்கள்.
இந்நிலையில் படத்திற்கான தோல்வி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் பிரபாஸ். “என்னை ரசிகர்கள் ஒரு ரொமான்டிக் ஹீரோவாகப் பார்க்க விரும்பவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அப்படியே இருந்தாலும் படத்தில் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்திருக்கிறார்கள். கோவிட் காரணத்தாலோ அல்லது ஸ்கிரிப்ட்டில் நாங்கள் எதையோ மிஸ் செய்திருக்கிறோம். என்னை அந்த மாதிரியான படத்தில் பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை என்பது புரிகிறது,” என்று தெரிவித்துள்ளார்.
'ராதே ஷ்யாம்' தோல்வியடைந்தாலும் பிரபாஸ் தற்போது 'ஆதி புருஷ், சலார், பிராஜக்ட் கே' உள்ளிட்ட பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார்.