மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தை முடித்துக் கொடுத்த கையோடு வாத்தி படப்பிடிப்பில் இணைந்து கொண்டார் தனுஷ். தெலுங்கு தமிழில் தயாராகும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். தெலுங்கில் சார் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் எஸ்.நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா தயாரிக்கிறார்கள். இந்த படம் கல்வி மாபியாக்களின் கதை என்றும், இதில் தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
படத்திற்கு ஜீ.பி.பிரகாஷ் இசை அமைக்கிறார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்புகள் ஏற்கனவே துவங்கி படப்பிடிப்பு நடந்தது. தற்போது ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் தனுஷ் பங்கேற்று நடித்து வருகிறார். இங்கு படப்பிடிப்பு முடிந்ததும் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.