பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு |
பிக் பாஸ் மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறவர் லாஸ்லியா. இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். தற்போது இலங்கையில் நிலவி வரும் கடும் நெருக்கடி குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் எழுதியிருப்பதாவது:
இலங்கையர்களாகிய நாங்கள் மிக மோசமான போரை எதிர்கொண்டோம், அதில் எங்கள் குடும்பங்கள் உள்பட பலரும் அனைத்தையும் இழந்தோம். அதன் பிறகு சுனாமியை எதிர்கொண்டோம். 2019ஆம் ஆண்டு தேவாலயங்களில் குண்டுவெடிப்புகளை எதிர்கொண்டோம். அதன்பிறகு கொரோனா வைரஸ் பாதிப்புகளை எதிர்கொண்டோம். இப்போது பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்கிறோம் .
இவை எதுவுமே எங்களின் தவறல்ல, நாங்கள் இலங்கையர்கள் என்பதால் இவை அனைத்தையும் எதிர்கொள்கிறோம். ஒவ்வொரு சூழ்நிலையிலும் இவை அனைத்தையும் எதிர்கொள்ளும் அளவுக்கு நாங்கள் பலமாக இருந்தோம். இப்போது இந்த பரிதாபமான சூழ்நிலையைச் சமாளிக்க ஒன்றாக இருப்போம், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம். என்று எழுதியிருக்கிறார்.