அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
பிக் பாஸ் மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறவர் லாஸ்லியா. இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். தற்போது இலங்கையில் நிலவி வரும் கடும் நெருக்கடி குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் எழுதியிருப்பதாவது:
இலங்கையர்களாகிய நாங்கள் மிக மோசமான போரை எதிர்கொண்டோம், அதில் எங்கள் குடும்பங்கள் உள்பட பலரும் அனைத்தையும் இழந்தோம். அதன் பிறகு சுனாமியை எதிர்கொண்டோம். 2019ஆம் ஆண்டு தேவாலயங்களில் குண்டுவெடிப்புகளை எதிர்கொண்டோம். அதன்பிறகு கொரோனா வைரஸ் பாதிப்புகளை எதிர்கொண்டோம். இப்போது பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்கிறோம் .
இவை எதுவுமே எங்களின் தவறல்ல, நாங்கள் இலங்கையர்கள் என்பதால் இவை அனைத்தையும் எதிர்கொள்கிறோம். ஒவ்வொரு சூழ்நிலையிலும் இவை அனைத்தையும் எதிர்கொள்ளும் அளவுக்கு நாங்கள் பலமாக இருந்தோம். இப்போது இந்த பரிதாபமான சூழ்நிலையைச் சமாளிக்க ஒன்றாக இருப்போம், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம். என்று எழுதியிருக்கிறார்.