ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தமிழில் 1987ல் ராமராஜன் நாயகனாக நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை பானுப்பிரியாவின் தங்கை நிஷாந்தி என்ற சாந்திப்பிரியா. அதையடுத்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பரவலாக சில படங்களில் நடித்த நிஷாந்தி ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு வெளியேறிவிட்டார்.
தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இந்தியாவின் நைட்டிங்கேள் என்று போற்றப்படும் சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் தான் அவர் ரீஎன்ட்ரி கொடுக்கப் போகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், சுதந்திரத்திற்காக போராடிய லட்சிய பெண்மணி சரோஜினி நாயுடுவின் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். வினய் சந்திரா இயக்கும் இப்படம் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் தயாராகிறது.