‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
புதுமுகங்கள் இணைந்து நடிக்கும் படம் முகமறியான். இதில் கிரண்குமார், திலிப் ஜெயின், ஒய்.ஜி.மகேந்திரன், காயத்திரி அய்யர், சிசர் மனோகர், விஜய் ஆனந்த், அம்பானி சங்கர், அஸ்மிதா, சூசேன், கோட்டை பெருமாள், தளபதி தினேஷ் , ரஞ்சன், சாய் கமல் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாய்மோரா இயக்கி உள்ளார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து வரவேற்பு பெற்ற ஊமைவிழிகள் சிவப்பு ரோஜாக்கள் போன்ற திரில்லர் பட வரிசையில் உருவாகி உள்ளது. கொரோனா காலகட்டங்களில் பல நெருக்கடிகளை சந்தித்து ஆந்திரா வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். மிகவும் பழமையான கட்டிடங்கள் , திகில் நிறைந்த பகுதிகளிலும், பல வருடங்கள் ஆட்கள் நடமாட்டமில்லாத இடங்களிலும், படப்பிடிப்பு நடத்தினோம்.
இதனால் படக்குழுவினர் நடிகர்கள் பல விபத்துகளையும், திகிலான பல அனுபவங்களையும் சந்தித்தனர். சுமார் 55 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிவடைந்துள்ளது. படம் விரைவில் வெளிவருகிறது.