படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
பேரன்பு படத்திற்கு பிறகு ராம் இயக்கி வரும் படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்து வருகின்றனர். மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த ஆண்டே இதன் படப்பிடிப்பு தொடங்கி விட்டது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
தனுஷ்கோடியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ரயில் ஷெட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இதில் நிவின்பாலி, சூரி நடித்து வருகிறார்கள். விரைவில் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்து, படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் தொடங்க இருக்கிறது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி இடையிலான ரயில் பயணத்தை கதைக்களமாக கொண்டு இந்த படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.