பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடந்தது. பல்வேறு நீதிமன்ற பிரச்சினைகளுக்கு பிறகு நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் விஷால் தலைமையிலான அணியினர் பெரும் வெற்றி பெற்றனர். தலைவராக நாசர், செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணை தலைவர்களாக கருணாஸ், பூச்சி முருகன் தேர்வானார்கள்.
இவர்கள் தவிர்த்து 21 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வானார்கள். இவர்கள் அனைவரும் விஷால் அணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் நடிகை குஷ்பு 1407 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். கோவை சரளா 2வது இடத்தையும், ராஜேஷ் 3வது இடத்தையும் பெற்றார்.
செயற்குழு உறுப்பினர்களாக தேர்வான மற்றவர்கள் வருமாறு: மனோபாலா, அஜய்ரத்னம், பசுபதி, ஜூனியர் பாலையா, சிபிராஜ், லதா, விக்னேஷ், சோனியா, பிரசன்னா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், சரவணன், பிரேம்குமார், ஸ்ரீமன், ஜெரால்டு, ரத்தன்பா, மா.பிரகாஷ், வாசுதேவன், ஹேமச்சந்திரன், காளிமுத்து.