3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் |
மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து நடித்து வந்தார் நடிகர் ரகுமான். துருவங்கள் பதினாறு பட வெற்றிக்கு பிறகு தமிழில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் மலையாளத்தில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இவர் நடித்த வைரஸ் என்கிற படம் வெளியானது. இதைத்தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது 'எதிரே' என்கிற படத்தில் நடித்துள்ளார் ரகுமான். அமல்ஜோபி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பிரபல கதாசிரியர் சேது கதை எழுதி உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது தனது டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார் ரகுமான். அதுமட்டுமல்ல இந்த படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ஒரு சுவாரசியமான விஷயத்தையும் அவர் கூறியுள்ளார். அதாவது படப்பிடிப்பில் இவர் பெரும்பாலும் வசனம் பேசியது எல்லாம் 'எதிரே' வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியை பார்த்து தானாம். அந்த அளவுக்கு சஸ்பென்ஸ் திரில்லராக வித்தியாசமான முறையில் இந்த கதையை கதாசிரியர் சேது உருவாக்கியுள்ளார். அவருக்கு எனது நன்றி என்று கூறியுள்ளார் ரகுமான்.