போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
சூர்யா படங்கள் என்றாலே ரிலீஸ் ஆவதற்கு முன்பும் ரிலீசான பின்பும் ஏதாவது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்ததாக கடும் சர்ச்சை எழுந்தது. தற்போது சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்றுள்ள உள்ளம் உருகுதய்யா என்கிற பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனக்ெகூறி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்திந்திய நேதாஜி சங்கத்தின் தலைவரான ராகுல் காந்தி என்பவர் எதற்கும் துணிந்தவன் படத்தில் உள்ளம் உருகுதய்யா பாடலில் இடம் பெற்றுள்ள காட்சிகள் தமிழ் கடவுளின் மாண்பை சீர்குலைக்கும் விதமாக இருப்பதாகவும், அந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனக் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த பாடலை இயக்கிய பாண்டிராஜ் நடித்த சூர்யா, எழுதிய யுகபாரதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.