மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் பரவலாக நடித்து வரும் பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ந்து தமிழில் நடிப்பதற்கும் திட்டமிட்டு உள்ளார்.
இந்த நிலையில் பூஜாஹெக்டே அளித்துள்ள ஒரு பேட்டியில், சினிமாவில் நம்பர் 1, நம்பர் 2 என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது படங்களில் வெற்றியை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். அதன் காரணமாக நான் ஒருபோதும் நம்பர் ஒன் நடிகையாக வேண்டும் என்று திட்டமிடுவது இல்லை. நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ரசிகர்களுக்கு பிடித்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்கள் ரசிக்கும் வகையில் நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே கவனமாக இருக்கிறேன். அதோடு சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக உள்ளது.
தெலுங்கில் நான் நடனமாடிய புட்டபொம்மா பாடலின் நடனத்தை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் ரசித்தார்கள். அதன் காரணமாக ஒவ்வொரு படங்களிலும் ரசிகர்களை கவரக்கூடிய நடன அசைவுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன். பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்து ஆடியுள்ள நடனத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.