பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்து சிலர் சாதித்து உள்ளனர். அவர்களில் சிவகார்த்திகேயன், சந்தானம், யோகிபாபு மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள். அவர்கள் மூவருமே விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் என்பது முக்கியமானது. அவர்களது வரிசையில் 'குத் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் இடம் பிடிப்பார் என பலரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்த பின்னும் இன்னும் பாராட்டுக்களைப் பெறாமல் இருக்கிறார் புகழ். சந்தானம் நடித்து வெளிவந்த 'சபாபதி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதற்கடுத்து 'என்ன சொல்லப் போகிறாய்' படத்திலும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்தார். இரண்டு படங்களிலும் அவரால் ரசிகர்களை சிரிக்க வைக்க முடியவில்லை.
அடுத்து கடந்த வாரம் வெளிவந்த அஜித் நடித்த 'வலிமை' படத்திலும் ஒரே ஒரு காட்சியில் நடித்தார். அதுவும் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. அடுத்த வாரம் வெளியாக உள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்திலாவது பேசப்படுவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.
இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், “நான் எதிலும் தோற்றுப்போவதில்லை! ஒன்று வெற்றி கொள்கின்றேன், இல்லை கற்று கொள்கின்றேன்,” என தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.