புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தெலுங்கு திரையுலகின் சீனியர் நடிகர் மோகன்பாபுவின் மகனும் சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவர் பதவியை பிடித்தவருமான நடிகர் விஷ்ணு மஞ்சு வீட்டில் விலை உயர்ந்த சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள மேக்கப் சாதன பொருட்கள் அடங்கிய பெட்டி ஒன்று திருடு போனது. இதுகுறித்து ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் விஷ்ணு மஞ்சு.
அதேசமயம் இந்தப்பொருள் திருடு போனது தெலுங்கு நடிகர் சங்க அலுவலகத்தில் இருந்து தான் என்று ஒரு தகவலும் கிளம்பியது. ஆனால் இதை மறுத்துள்ள போலீசார் திருட்டு நிகழ்ந்தது நடிகர் விஷ்ணு மஞ்சுவின் வீட்டில் தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.
மேலும் இந்த திருட்டு நடந்த பின்னர் ஹேர் டிரஸர் நாக ஸ்ரீனு என்பவரின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.