புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
90களில் பரபரப்பான கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டார். தற்போது ஆந்திர மாநிலத்தில் சட்டசபை உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவரது மகன் கவுசிக் தீவிரமான விஜய் ரசிகர். சமீபத்தில் ரோஜா, ஆர்கே செல்வமணி, கவுசிக் ஆகியோர் கலந்துகொண்ட ஒரு ரியாலிட்டி ஷோவில் விஜய் மீதான ஈர்ப்பு எத்தகையது என கேட்டதற்கு அவர் கூறிய பதில் விஜய் ரசிகர்களையே திகைக்க வைப்பதாக இருக்கிறது.
ஆம்.. விஜய்யின் ஒவ்வொரு பட டிரைலரையும் கிட்டத்தட்ட பல்லாயிரம் முறை பார்த்து விடுவாராம் கவுசிக். இவற்றை பார்ப்பதற்காகவே கிட்டத்தட்ட நூறு ஜிமெயில் கணக்குகளை துவங்கி வைத்திருக்கிறாராம். அத்தனை கணக்குகள் மூலமாகவும் அந்த டிரைலரை பார்த்து லைக் செய்வது, கமெண்ட் போடுவது என தவறாமல் தொடர்ந்து செய்து வருகிறாராம் கவுசிக். தங்கள் மகன் விஜய் ரசிகர் என்பதில் பெற்றோருக்கும் மிகவும் பெருமையே என்பதையும் அந்த நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.