துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பாண்டிராஜ் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், சூர்யா, பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'எதற்கும் துணிந்தவன்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
இப்படத்தைத் தமிழ் மற்றும் தெலுங்கில் மார்ச் 10ம் தேதி வெளியிட உள்ளார்கள். இப்படத்திற்கான தெலுங்கு டப்பிங் தற்போது நடந்து வருகிறது. சூர்யா, தெலுங்கில் சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
சூர்யாவிற்கு தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க மார்க்கெட் உள்ளது. அவருக்கென அங்கு ரசிகர்களும் உள்ளார்கள். இதுவரையில் அவருடைய தெலுங்கு டப்பிங்கிற்கு வேறு ஒருவர் தான் குரல் கொடுத்து வந்தார். இப்போது முதல் முறையாக சூர்யாவே சொந்தக் குரலில் பேசுகிறார்.
இப்போது முன்னணி நடிகர்களின் படங்கள் பான்--இந்தியா படங்களாகத்தான் வெளியாகி வருகின்றன. 'எதற்கும் துணிந்தவன்' படமும் தமிழ் தவிர, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான்--இந்தியா படமாக வெளிவர உள்ளது