புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தென்னிந்திய சினிமாவில் குணசித்ர நடிகராக இருப்பவர் மோகன் சர்மா. தமிழில் ஏணிப்படிகள், கண்ணெதிரே தோன்றினாள். அப்பு, பிரண்ட்ஸ், சச்சின், தவம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கிராமம் என்ற மலையாள படத்தையம், நம்ம கிராமம் என்ற தமிழ் படத்தையும் இயக்கி உள்ளார். இந்த படம் கேரள அரசின் விருதை பெற்றது.
மோகன் சர்மா நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:
ஒரு நாள் நான் வெளியில் போக எனது காரை எடுத்தேன். அப்போது மர்ம நபர் ஒருவர், எனது வீட்டு முன்பு காரை நிறுத்திக்கொண்டு எடுக்க மறுத்தார். காரை எடுக்கச் சொன்னபோது, அந்த நபர் என்னிடம் சண்டை போட்டார். மேலும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, இரும்பு கம்பியால் என்னை தாக்க முற்பட்டார். அவர் மீது சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நான் கொடுத்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன். என்றார்.