‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் | ரூ.60 கோடி பண மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு | என் இதயம் நொறுங்கிவிட்டது : நாய்களுக்காக கண்ணீர் விட்டு கதறிய நடிகை சதா |
வாரிசு நடிகை என்கிற அடையாளத்துடன் சினிமாவில் களமிறங்கியவர் தான் இயக்குனர் பிரியதர்ஷன் - நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி.. தெலுங்கில் அறிமுகமானாலும் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தான் பிஸியாக நடித்து வருகிறார் கல்யாணி. சமீபத்தில் இவரது நடிப்பில் தமிழில் வெளியான மாநாடு, மலையாளத்தில் வெளியான ஹிருதயம் மற்றும் ப்ரோ டாடி ஆகிய மூன்று படங்களுமே வெற்றி பெற்றதால் ராசியான நடிகை என்கிற பெயரையும் பெற்றுள்ளார்.
தவிர சோஷியல் மீடியாவிலும் கல்யாணி பிரியதர்ஷன் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். ரசிகர்களுடன் அவ்வப்போது கேள்வி பதில் உரையாடல் நடத்திவரும் கல்யாணி, தனது படம் குறித்த அப்டேட் தகவல்களையும் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அந்தவகையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இந்த தகவலை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தி உள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.