மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை | சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? |
கடந்த 2017ம் ஆண்டு தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் மலையாள முன்னணி நடிகரான திலீப், அவரது கார் டிரைவர் சுனில் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் திலீப் மட்டும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் பலாத்காரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை திலீப் பார்த்து ரசித்ததாக கூறப்பட்டது. அந்த வீடியோவை போலீசார் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தற்போது இந்த வீடியோ வெளியாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நடிகை வீடியோ வெளியானது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வீடியோ பரவுவதை தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தின் நகலை ஜனாதிபதி, பிரதமர், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, கேரள முதல்வர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.