கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி |
கேரளாவைச் சேர்ந்த பிரஜின், சின்னத்திரை தொடர்களில் பிரபலம். இது ஒரு காதல் கதை, பெண், அஞ்சலி, உள்பட பல தொடர்களில் நடித்தவர் அதன்பிறகு சினிமா பக்கம் போனார். ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் தீ குளிக்கும் பச்சை மரம் படத்தின் மூலம் ஹீரோ ஆனார்.
அதன்பிறகு சுற்றுலா, மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை படங்களில் நடித்தார். ஆனாலும் அவரால் ஒரு ஹீரோவாக நிலைத்து நிற்க முடியவில்லை. இதனால் மீண்டும் சின்னத்திரைக்கே வந்தவர், சின்னத்தம்பி, அன்புடன் குஷி, வைதேகி காத்திருந்தாள் தொடர்களில் நடித்தார்.
இந்த நிலையில் இப்போது மீண்டும் சினிமாவில் பிசியாகி விட்டார், நினைவெல்லாம் நீயடா, சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி, பெயரிடப்படாத ஒரு படம் என 3 படங்களில் நடித்து வருகிறார். இனி சினிமாவில் தீவிர கவனம் செலுத்தும் விதமாக வைதேகி காத்திருந்தாள் தொடரில் இருந்து வெளியேறினார் பிரஜின்.
இந்த சீரியலில் பிரஜின் ஹீரோவாகவும், சரண்யா ஹீரோயினாகவும் நடித்து வந்தனர். தற்போது இந்த தொடரில் பிரஜினுக்கு பதிலாக ராஜபார்வை தொடரில் நடித்த முன்னா நடிக்கிறார்.