மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கேரளாவைச் சேர்ந்த பிரஜின், சின்னத்திரை தொடர்களில் பிரபலம். இது ஒரு காதல் கதை, பெண், அஞ்சலி, உள்பட பல தொடர்களில் நடித்தவர் அதன்பிறகு சினிமா பக்கம் போனார். ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் தீ குளிக்கும் பச்சை மரம் படத்தின் மூலம் ஹீரோ ஆனார்.
அதன்பிறகு சுற்றுலா, மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை படங்களில் நடித்தார். ஆனாலும் அவரால் ஒரு ஹீரோவாக நிலைத்து நிற்க முடியவில்லை. இதனால் மீண்டும் சின்னத்திரைக்கே வந்தவர், சின்னத்தம்பி, அன்புடன் குஷி, வைதேகி காத்திருந்தாள் தொடர்களில் நடித்தார்.
இந்த நிலையில் இப்போது மீண்டும் சினிமாவில் பிசியாகி விட்டார், நினைவெல்லாம் நீயடா, சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி, பெயரிடப்படாத ஒரு படம் என 3 படங்களில் நடித்து வருகிறார். இனி சினிமாவில் தீவிர கவனம் செலுத்தும் விதமாக வைதேகி காத்திருந்தாள் தொடரில் இருந்து வெளியேறினார் பிரஜின்.
இந்த சீரியலில் பிரஜின் ஹீரோவாகவும், சரண்யா ஹீரோயினாகவும் நடித்து வந்தனர். தற்போது இந்த தொடரில் பிரஜினுக்கு பதிலாக ராஜபார்வை தொடரில் நடித்த முன்னா நடிக்கிறார்.