திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 169 பேர் போட்டியிட்டார்கள். அதில் 100 பேர் வெற்றி பெற்றார்கள். அதையடுத்து வெற்றி பெற்ற விஜய் ரசிகர் மன்றத்தினர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். அதோடு ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர்கள் அதிகமான பேர் வெற்றி பெற்றது சில அரசியல் கட்சிகளையும் அதிரவைத்தது.
இந்நிலையில் அடுத்த மாதம் தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுவதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார் விஜய். குறிப்பாக, மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும் விஜய் ரசிகர்கள் போட்டிடப் போகிறார்கள். ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிகபடியான தொகுதிகளில் வெற்றி பெற்றதால் விஜய் மக்கள் இயக்கத்தினர் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.