இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி |
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்களது திருமண உறவை முறித்துக் கொள்ள போவதாக கடந்த திங்கள்கிழமை அறிவித்தார்கள். அவர்கள் இருவரது சமூக வலைதளங்களிலும் ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டு அதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். இது திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 ஆண்டுகளாக கணவன் மனைவியாக இணைந்து வாழ்ந்த தனுஷும் ஐஸ்வர்யாவும் தற்போது இரண்டு மகன்களுக்கு பெற்றோராக இருக்கிறார்கள். அதனால் தங்களது கருத்து வேறுபாடுகளில் இருந்து விடுபட்டு மீண்டும் அவர்கள் இணைந்து வாழவேண்டும் என்று அனைவரும் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி தனுஷின் அண்ணனான இயக்குனர் செல்வராகவன் வெளியிட்ட பதிவு ஒன்று மீண்டும் சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கிறது. காரணம் அந்த பதிவில், தயவுசெய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டுவிட்டு நன்கு உணவருந்திவிட்டு ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று அந்தப் பிரச்னையே இருக்காது. இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள் என பதிவிட்டு இருந்தார் செல்வராகவன். தனுஷ் ஐஸ்வர்யாவிற்கிடையே பிரச்னை நடந்து கொண்டிருந்தபோதுதான் செல்வராகவன் இப்படி பதிவிட்டிருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.