'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
ஸ்கை மேஜிக் பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவன சார்பில் பாக்ய லட்சுமி, வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‛சினம் கொள்'. ஆண்டவன் கட்டளை, மிக மிக அவசரம் போன்ற படங்களில் நடித்த அரவிந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நர்வினி டெய்ரி, லீலாவதி, பிரேம் ஆகியோரும் நடித்துள்ளனர். எம்.ஆர்.பழனிகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கூறியதாவது: 2009ல் இலங்கையில் நடந்த இறுதி போருக்கு பிறகு அங்கு எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் இது. யுத்தத்திற்கு பிறகு இன்றைய ஈழ மக்களின் வாழ்வியலை பேசும் படம். போரின் வடுக்களோடு வாழும் மக்களின் அவலத்தை மட்டுமல்லாது, போருக்கு பிறகு அவர்கள் சந்தித்த நெருக்கடிகளையும், பொருளாதார சிக்கல்களையும், சிறையிலிருந்து வெளிவந்த போராளிகளின் வாழ்வியலையும் சொல்லியிருக்கிறோம்.
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் மட்டுமே படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். அங்கே படப்பிடிப்பை நடத்த மிகவும் சிரமப்பட்டோம் சிங்களர்களுக்கு எதிரான படம் என்று படப்பிடிப்பை நடத்த விடாமல் செய்துவிட்டார்கள். அதனால் சுமார் 10 நாட்களுக்கும் மேல் 75 பேருடன் யாழ்ப்பாணத்தில் சும்மா இருந்தோம். அதனால் எங்களுக்கு பண இழப்பும் ஏற்பட்டது. எப்படியோ படப்பிடிப்பை முடித்துவிட்டோம். படம் வருகின்ற 14ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. என்றார்.