முதல் நாளில் ரூ.27 கோடி வசூலித்த 'மிராய்' | 'கங்குவா' கதாநாயகி வீட்டில் துப்பாக்கிச் சூடு : இது ‛டிரைலர்' என எச்சரிக்கை | கர்நாடக இசைப்பாடகி எஸ்.ஜே.ஜனனியின் 3 டாட் ரெக்கார்டிங் ஸ்டுடியோஸ் திறப்பு : கலைஞர்கள் பங்கேற்பு | டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்த கர்நாடகா அரசு | சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறிய ஐஸ்வர்ய லட்சுமி | பிரச்சனை முடிந்து திரைக்கு வந்தது 'தணல்' | ‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 |
1980களில் பிரபல பாடலாசிரியராக திகழ்ந்த காமகோடியன்(76) வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்னையால் சென்னையில் காலமானார். தேவதை, கண்ணாத்தாள், பாட்டாளி, தொடரும், சிகாமணி ரமாமணி, காலாட்படை, வல்லமை தாராயோ உள்பட ஏராளமான படங்களுக்கு நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியிருப்பவர் கவிஞர் காமகோடியன்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா என 3 தலைமுறை இசையமைப்பாளர்களுடன் இவர் பணியாற்றி உள்ளார். கடைசியாக ‛திருட்டு ரயில்' என்ற படத்தில் மொத்த பாடல்களையும் இவர் எழுதினார். அதன்பின் வயது மூப்பால் சினிமாவை விட்டு ஒதுங்கினார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், எழுத்தாளர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.