பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
ஆர்ஆர்ஆர் என்கிற பிரமாண்டமான படம் ஜன-7ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு புரமோஷன் நிகழ்ச்சிகளை எல்லாம் களைகட்டும் விதமாக நடத்தி ரிலீஸுக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில், தற்போது ஒமிக்ரான் பரவல் காரணமாக 50 சதவீத பார்வையாளர்களுக்கே அனுமதி என்கிற அரசின் நிபந்தனையால் தற்போதைக்கு ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் இல்லை என அறிவித்து விட்டார்கள்.. இந்தப்படத்தின் திடீர் விலகலால், தமிழில் ஜன-26ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்த விஷாலின் வீரமே வாகை சூடும் படம் ஜன-14ஆம் தேதிக்கு தங்களது ரிலீஸை மாற்ற முயற்சிக்கிறது.
அதேபோல தெலுங்கிலும் ஆர்ஆர்ஆர் ரிலீஸ் தள்ளிப்போவதால், அதை சாதகமாக்கி சில படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில் கழுகு பட இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் ராணா நடிப்பில் உருவாகியுள்ள '1945' என்கிற படம் வரும் ஜன-7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரெஜினா கதாநாயகியாக நடிக்க, நாசர், சத்யராஜ், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும் மடை திறந்து என்கிற பெயரில் உருவானது
ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த சில வருடங்களாகவே இந்தப்படம் கிடப்பில் கிடந்தது. இந்தநிலையில் தெலுங்கில் '1945' என்கிற பெயரில் வெளியாகிறது.