மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஆர்ஆர்ஆர் என்கிற பிரமாண்டமான படம் ஜன-7ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு புரமோஷன் நிகழ்ச்சிகளை எல்லாம் களைகட்டும் விதமாக நடத்தி ரிலீஸுக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில், தற்போது ஒமிக்ரான் பரவல் காரணமாக 50 சதவீத பார்வையாளர்களுக்கே அனுமதி என்கிற அரசின் நிபந்தனையால் தற்போதைக்கு ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் இல்லை என அறிவித்து விட்டார்கள்.. இந்தப்படத்தின் திடீர் விலகலால், தமிழில் ஜன-26ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்த விஷாலின் வீரமே வாகை சூடும் படம் ஜன-14ஆம் தேதிக்கு தங்களது ரிலீஸை மாற்ற முயற்சிக்கிறது.
அதேபோல தெலுங்கிலும் ஆர்ஆர்ஆர் ரிலீஸ் தள்ளிப்போவதால், அதை சாதகமாக்கி சில படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில் கழுகு பட இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் ராணா நடிப்பில் உருவாகியுள்ள '1945' என்கிற படம் வரும் ஜன-7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரெஜினா கதாநாயகியாக நடிக்க, நாசர், சத்யராஜ், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும் மடை திறந்து என்கிற பெயரில் உருவானது
ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த சில வருடங்களாகவே இந்தப்படம் கிடப்பில் கிடந்தது. இந்தநிலையில் தெலுங்கில் '1945' என்கிற பெயரில் வெளியாகிறது.