பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
அதர்வா கடைசியாக நடித்த வெற்றி படம் 100. அதன்பிறகு 2 வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் தள்ளிப்போகாதே படம் வெளிவந்தது. நடித்து முடித்துள்ள குருதி ஆட்டம் படம் விரைவில் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அட்ரஸ், டிரிக்கர் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நிறங்கள் மூன்று என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் அவருடன் சரத்குமார் மற்றும் ரகுமான் நடிக்கிறார்கள். இதனை ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் கருணாகரன் தயாரிக்கிறார். கார்த்திக் நரேன் இயக்குகிறார். ஜேக்ஸ் பிஜோய் இசை அமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி தயாரிப்பாளர் கருணாகரன் கூறியதாவது: இது எங்கள் நிறுவனத்தின் 25வது படைப்பாகும் எனவே பெருமைப்படுமளவிலான ஒரு அற்புதமான திரைப்படத்தை உருவாக்க நினைத்தேன். நிறங்கள் மூன்று மூலம் அது நிறைவேறியுள்ளது. இப்படத்தில் கார்த்திக் நரேன் தனது திறமையான இயக்கத்தால், இந்த கலைஞர்களின் திறமையை, அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார்.
தனது முதல் அறிமுக திரைப்படமான 'துருவங்கள் பதினாறு' மூலம் மொத்த திரையுலகிலும் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் மீது எனக்கு எப்போதும் ஒரு பிரமிப்பு உண்டு. நிறங்கள் மூன்று இயக்குநர் கார்த்திக் நரேனின் அந்தஸ்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இது ஒரு ஹைப்பர்லிங்க்-டிராமா-த்ரில்லர், மேலும் வலுவான பாத்திரங்கள், சுவாரஸ்ய திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்களுடன் கார்த்திக் நரேனின் அழுத்தமான முத்திரை இப்படத்தில் இருக்கும். என்றார்.