துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழ் சினிமா நடிகையான சனம் ஷெட்டி, இதுவரை 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அவர் அதன் மூலம் ஓரளவு சோஷியல் மீடியாக்களில் பேசப்பட்டார். 25 படங்கள் நடித்தும் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே புலம்பியிருந்தார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் கூட அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர் நடித்த படம் ஒன்று தற்போது தான் வெளியாகவுள்ளது. அதற்கான புரோமோஷனல் பணிகளில் சனம் ஷெட்டி சமீபத்தில் கலந்து கொண்டார்.
அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியால் உங்களுக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்கிறதா என நிரூபர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சனம் ஷெட்டி, 'என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை மட்டும் தான் சொல்ல முடியும் மற்றவர்களுக்கு எப்படி இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்ததால் எனக்கு படவாய்ப்புகள் வருகிறதா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில்' என்று கூறியுள்ளார்.