தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? |
சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக் மற்றும் யோகிபாபு நடிப்பில் வெளியான அரண்மனை 3 படம் தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. வெளியான 12 நாட்களில், 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து சாதனை படைத்துள்ளதாக ஜீ5 நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜீ5 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஜீ5 நிறுவனம் அடுத்தடுத்து நல்ல கதைகளுடன், வெற்றிகரமான திரைப்படங்களை தந்து, ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த வரிசையில் மலேஷியா டூ அம்னீஷியா, டிக்கிலோனா மற்றும் விநோதய சித்தம் திரைப்படங்களை தொடர்ந்து, தற்போது அரண்மனை 3' திரைப்படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. வெளியான 12 நாட்களில், 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. தற்போது சித்திரை செவ்வானம் படத்தை வெளியிட்டுள்ளது.