கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் மாநாடு. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை முதலில் கலைஞர் டிவி வாங்க தான் பேசி வந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட டிவி நிறுவனம் வருகிற பொங்கலுக்கு மாநாடு படத்தை ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டது.
ஆனால் மாநாடு படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள சோனிலிவ் நிறுவனமோ, மாநாடு படம் ஓடிடி தளத்தில் வெளியாகி 75 நாட்கள் ஆன பிறகே டிவியில் ஒளிபரப் பப்பட வேண்டும் என்று ஒரு கண்டிசனை போட்டு விட்டது. அதன்காரணமாகவே கலைஞர் டிவி பின்வாங்கிவிட இப்போது மாநாடு டிவி உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது.
கடந்த மாதம் 25ம் தேதி மாநாடு படம் தியேட்டர்களில் வெளியாகியிருப்பதால் நான்கு வாரங்கள் கழித்து அதாவது இந்த மாதம் இறுதியில் சோனி லிவ் ஓடிடியில் மாநாடு படம் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.