திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
இயக்குனர் பணியை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, ஹீரோவாக தன்னை தேடி வரும் வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக்கொண்டு தனது பார்வையை நடிப்பு பக்கம் திருப்பியுள்ளார் பிரபுதேவா. அந்தவகையில் சமீபத்தில் அவரது பொன் மாணிக்கவேல் படம் வெளியானது. அடுத்ததாக தேள், பகீரா ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.. ஆனால் இவையெல்லாம் கமர்ஷியல் அம்சம் கொண்ட படங்கள்.
இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அதாவது எழுபதுகளில் வெளியான அழியாத கோலங்கள் பாணியில் ஒரு கதையில் நடிக்க இருக்கிறார் பிரபுதேவா. ரெஜினா கதாநாயகியாக நடிக்க, தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதில் பிரபுதேவா எழுத்தாளர் ஆகவும் ரெஜினா ஆசிரியையாகவும் நடிக்கின்றனராம்.
பள்ளிக்கால வாழக்கையை குறிப்பாக மாணவ பருவத்தில் இருபாலருக்கும் இடையே ஏற்படும் இனக்கவர்ச்சி பற்றியும், வயது கூடியவர் மேல் ஏற்படும் ஈர்ப்பு பற்றியும் காதல் கலக்காமல் இந்தப்படத்தில் சொல்ல இருக்கிறார்களாம். கொரில்லா படத்தை இயக்கிய டான் சாண்டி இந்தப்படத்தை இயக்க உள்ளார்.