பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
இயக்குனர் பணியை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, ஹீரோவாக தன்னை தேடி வரும் வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக்கொண்டு தனது பார்வையை நடிப்பு பக்கம் திருப்பியுள்ளார் பிரபுதேவா. அந்தவகையில் சமீபத்தில் அவரது பொன் மாணிக்கவேல் படம் வெளியானது. அடுத்ததாக தேள், பகீரா ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.. ஆனால் இவையெல்லாம் கமர்ஷியல் அம்சம் கொண்ட படங்கள்.
இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அதாவது எழுபதுகளில் வெளியான அழியாத கோலங்கள் பாணியில் ஒரு கதையில் நடிக்க இருக்கிறார் பிரபுதேவா. ரெஜினா கதாநாயகியாக நடிக்க, தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதில் பிரபுதேவா எழுத்தாளர் ஆகவும் ரெஜினா ஆசிரியையாகவும் நடிக்கின்றனராம்.
பள்ளிக்கால வாழக்கையை குறிப்பாக மாணவ பருவத்தில் இருபாலருக்கும் இடையே ஏற்படும் இனக்கவர்ச்சி பற்றியும், வயது கூடியவர் மேல் ஏற்படும் ஈர்ப்பு பற்றியும் காதல் கலக்காமல் இந்தப்படத்தில் சொல்ல இருக்கிறார்களாம். கொரில்லா படத்தை இயக்கிய டான் சாண்டி இந்தப்படத்தை இயக்க உள்ளார்.