சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மம்முட்டி நடிப்பில் கே.மது இயக்கிய ஒரு சி.பி.ஐ டயரி குறிப்பு மலையாள படம் 1988ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இதில் மம்முட்டியுடன் லிஸி, ஊர்வசி, சுரேஷ் கோபி, முகேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இதன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் ஜாக்ரதா என்ற பெயரில் 1989ம் ஆண்டும், மூன்றாம் பாகம் சேதுராம அய்யர் சி.பி.ஐ என்ற பெயரில் 2004ம் ஆண்டும், 4ம் பாகம் நேரறியான் சி.பி.ஐ என்ற பெயரில் 2005ம் ஆண்டும் வெளியானது. தற்போது 16 வருடங்களுக்கு பிறகு இதன் 5ம் பாகம் தயாராகிறது.
இதிலும் மம்முட்டி ஹீரோவாக நடிக்கிறார். மது இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் வருகிற 29ம் தேதி தொடங்குகிறது. இந்த படத்தின் கதைப்படி ஹீரோ சேதுராம அய்யர் ஓய்வு பெற்று விடுகிறார். என்றாலும் போலீசால் தீர்க்க முடியாத ஒரு வழக்கை தீர்த்து வைக்க அவர் சிறப்பு அதிகாரியாக அழைக்கப்படுகிறார் என்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய சினிமாவில் ஒரே இயக்குனர், ஒரே ஹீரோ இணைந்து பணியாற்றும் 5வது பாகம் பட இதுதான் என்கிறார்கள்.