ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛மாநாடு. டைம் லூப் கதையில் அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகி உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் துவங்கியதில் இருந்து பல்வேறு பிரச்னைகளை கடந்து வளர்ந்து வந்த இந்த படம் ஒருவழியாக வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது. தீபாவளிக்கு படம் வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஆனால் ரஜியின் அண்ணாத்த படம் அநேக தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டதால் இந்த படம் அப்போது வெளியாகவில்லை. மாறாக நாளை(நவ.,25) இப்படம் வெளியாகும் என அறிவித்திருந்தனர். தியேட்டர்களுக்கான முன்பதிவும் தொடங்கி நடந்து வந்தது.
இந்நிலையில் கடைசிநேரத்தில் இந்த படம் தள்ளிப்போவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார்.