கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
நடன பயிற்சியாளராக இருந்த கோகுல், மானாட மயிலாட நிகழ்சி மூலம் புகழ்பெற்றார். அம்புலி, ஆ, ஜம்புலிங்கம், மகளிர் மட்டும், ஐரா போன்ற படங்களில் நடித்துள்ள இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். கோகுல்நாத் யூனிக் டேலண்ட் அகாடமி என்கிற பெயரில் ஒரு பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறார். அதில் பல குழந்தைகள் பல கலைகளில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கோகுல்நாத்தும், அவர் நடத்தி வரும் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்களும் 15 கின்னஸ் சாதனைகள் படைத்துள்ளார். இதில் கோகுல்நாத் மட்டும் 4 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார். கின்னஸ் புத்தகத்தில் தனது பெயர் இடம்பெற்று உள்ளதை வீடியோவாக பதிவிட்டு உள்ளார்.
'கின்னஸ் புத்தகத்தில் எனது பெயர் இடம் பெற்றுள்ளதை பார்த்து சிறு குழந்தையை போல் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது” என குறிப்பிட்டிருக்கிறார்.