பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் | ராஜா சாப் பட இயக்குனருக்கு விஎப்எக்ஸ் சூப்பர்வைசர் மிரட்டல் ; தயாரிப்பாளர் வெளியிட்ட பகீர் தகவல் | இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! |
'பாகுபலி' படங்களுக்குப் பிறகு தெலுங்குத் திரையுலகத்தில் பலரும் பான் - இந்தியா படங்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்த இரண்டு மாதங்களுக்குள்ளாக 'புஷ்பா, ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம்' ஆகிய பான்-இந்தியா படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் 'புஷ்பா, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களின் பாடல்களை மட்டும் யு-டியூபில் வெளியிட்டுள்ளார்கள். 'ராதே ஷ்யாம்' படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாக உள்ளது.
'புஷ்பா' படத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'சாமி சாமி' பாடல் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்தது. வித்தியாசமான டியூன், குரல், வரிகள், ராஷ்மிகாவின் கிளாமர் என இப்பாடல் ரசிகர்களிடம் உடனடியாக சென்று சேர்ந்தது. ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள இதன் தெலுங்குப் பாடல் 38 மில்லியன் பார்வைகள், தமிழ்ப் பாடல் 7 மில்லியன், மலையாளம் 2 மில்லியன், கன்னடம் 1 மில்லியன் என பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' என்ற பாடல் கடந்த வாரம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் யு-டியுபில் வெளியானது. கடந்த ஐந்து நாட்களில் இந்தப் பாடல் தெலுங்கில் 15 மில்லியன் பார்வைகள், தமிழில் 2 மில்லியன், கன்னடத்தில் 2 லட்சம், மலையாளத்தில் 1 லட்சம், ஹிந்தியில் 7 மில்லியன் பார்வைகள் என அடுத்த வரவேற்பைப் பெற்ற பாடலாக உள்ளது.
இந்த இரண்டு பாடல்களுக்கும் போட்டியாக அடுத்து பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தின் மூன்று முக்கிய படங்கள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இந்திய சினிமாவில் அடிக்கடி பேசப்படும் படங்களாக இருக்கப் போகிறது.