புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போதுள்ள முன்னணி நடிகைகளில் இளம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. அல்லு அர்ஜுன் ஜோடியாக 'புஷ்பா' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்ற 'ஸ்ரீவள்ளி', 'சாமி சாமி' பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போதும் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் படப்பிடிப்பின் லஞ்ச் இடைவெளியில் சுவாரசியமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா. அதில் கை விரல்கள் பகுதி மட்டும் அவரது வழக்கமான உடல் நிறத்தில் இருக்க, கையின் மற்ற பகுதி கருப்பு நிறத்தில் இருக்கிறது.
படத்தில் மேக்கப் மூலம் அவரை கருப்பான பெண்ணாக மாற்றியிருக்கிறார்கள். மேக்கப் மூலம் எப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதை தெரிவிக்க ராஷ்மிகா இந்த புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பார் போலிருக்கிறது.
செம்மரக் கடத்தல் பற்றிய படம் என்பதால் படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா ஆகியோர் தமிழர் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களா என்ற சந்தேகம் இப்படம் ஆரம்பிக்கப்பட்ட போதே எழுந்தது. படம் வெளிவரும் சமயம் ஏதாவது சர்ச்சைகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.