சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளர் ஆனவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். இதனால் குறுகிய காலத்தில் பாலிவுட், ஹாலிவுட் என்று வேகமாக வளர்ந்து விட்டார். அதோடு, ஆஸ்கர் விருதும் பெற்று உலக அளவில் பேசப்படும் இசையமைப்பாளரானார்.
இந்தநிலையில் தற்போது ரஹ்மான் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரஜினி படங்களுக்காக தான் கடினமாக உழைத்ததாக தெரிவித்துள்ளார். அதாவது ரஜினி நடிக்கும் படங்களை மார்ச் மாதத்தில் தொடங்கும் தயாரிப்பாளர்கள் தீபாவளிக்கே படம் ரிலீஸ் என்பார்கள். அதனால் படம் வெளியாகும் கடைசி நேரத்தில் பின்னணி இசையமைக்க சொல்வார்கள். இதனால் மற்ற நடிகர்களின் படங்களைவிட ரஜினி படங்களுக்காக பல இரவுகள் தூங்காமல் உழைத்தி ருக்கிறேன். அதுவும் எனது ஸ்டுடியோ அமைந்துள்ள பகுதியில் அடிக்கடி பவர்கட் ஆகும் என்பதால் ஜெனரேட்டர் உதவியுடன் பணியாற்றினேன். ரஜினி படம் என்பதால் மற்ற நடிகர்களின் படங்களை விட அவரது படங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.