தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். பியார் பிரேமா காதல் படத்திற்கு பின் தற்போது எப்ஐஆர், சேஸ், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இப்போது பிரபுதேவா உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இணையதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடத்தில் ஒருவர், ‛‛லிவிங் டுகெதர் வாழ்க்கை'' குறித்த கேள்வியை எழுப்பினார். அதற்கு ‛‛எனக்கு ஓகே தான். ஆனால் அப்படி ஒரு வாழ்க்கை வாழ பாய்பிரண்ட் வேண்டுமே, அப்படி ஒருவர் இல்லாத போது அந்த வாழ்க்கையை பற்றி எப்படி நான் நினைக்க முடியும், வாழ முடியும்'' என பதிலளித்துள்ளார் ரைசா வில்சன்.