நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தற்போது நடிகர் அதர்வா தள்ளிப்போகாதே, அட்ரஸ், நவரச, பட்டத்து அரசன் என பல படங்களில் நடித்து வருகிறார். இதில் ஏற்கனவே சற்குணம் இயக்கத்தில் சண்டி வீரன் என்ற படத்தில் நடித்த அதர்வா தற்போது இரண்டாவது முறையாக பட்டத்து அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஜ்கிரண், ராதிகா சரத்குமார் உட்பட்ட பல பிரபலங்களும் நடிக்கிறார்கள்.
பெண்கள் கபடியை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள எம்ஜிஎம் கடற்கரை ஓரம் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் நடைபெற்று வந்தது. ஆனால் நேற்று நள்ளிரவு சென்னையில் பலத்த மழை பெய்ததின் காரணமாக செட்டுக்குள் கடல் நீர் புகுந்து விட்டது. இதனால் தொடர்ந்து நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது படத்திற்கு தற்காலிகமாக பட்டத்து அரசன் என்று பெயர் வைத்திருந்த போதும் இது மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.