மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! | ''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு | ''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் |
கடந்த சனிக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு கொடுத்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் இந்திய திரையுலகம் மீளவில்லை. இந்நிலையில் தமிழ் சினிமாவைச்சேர்ந்த விஷால், புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவர் படிக்க வைத்து வந்த பிள்ளைகளின் கல்வி செலவை இனிமேல் தான் ஏற்றுக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
அதையடுத்து தமிழ் சினிமாவைச்சேர்ந்த இன்னொரு நடிகரான சிவகார்த்திகேயனும் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ஸ்டுடியோவிற்கு சென்று அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதையடுத்து மீடியாக்களை சந்தித்த சிவகார்த்திகேயன், புனித் ராஜ்குமாரின் மரணத்தை நம்பவே முடியவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவருடன் பேசினேன். பெங்களூர் வருபோது சந்திக்குமாறு சொன்னார். ஆனால் நான் இப்போது பெங்களூர் வந்திருக்கிறேன். ஆனால் அவர் இல்லை. அவர் ஒரு திரையிலும், திரைக்கு பின்னாடியும் ஒரு மிகச்சிறந்த நடிகராக மனிதராக வாழ்ந்திருக்கிறார். அவர் ஒரு சிறந்த ஆன்மா. அவருக்கு மறைவே கிடயாது.
திரையில் மட்டுமின்றி திரைக்கு பின்னரும் அவர் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது மறைவின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் என்னால் வெளியில் வர முடியவில்லை என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அதோடு புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ் குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உள்ளார்.