நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவும் அவரது காதல் கணவர் நாகசைதன்யாவும் சமீபத்தில் தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். ஆனால், அவர்களிடம் இருந்து அறிவிப்பு வெளியான பின்னரும் கூட, அவர்களது பிரிவு எதனால், இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பல யூடியூப் சேனல்களில் தங்களுக்கு தோன்றியபடி செய்திகளை வெளியிட்டு வந்தார்கள்.
இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள குக்கட்பள்ளி நீதிமன்றத்தில் இரண்டு டிவி சேனல்கள் மற்றும் 3 யூடியூப் சேனல்கள் மீது நீதிமன்றத்தில் அவதூறு புகார் அளித்தார் சமந்தா. இதனை அவசர வழக்காக கருதி முன்னுரிமை தந்து விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார் சமந்தாவின் வழக்கறிஞர்..
அதற்கு நீதிபதி, “அவதூறு வழக்கு தொடர்வதற்கு பதிலாக சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து மன்னிப்பு என்கிற ஒரு வார்த்தையை கேட்க செய்திருக்க முடிந்திருக்குமே” என கூறியுள்ளார். மேலும் பிரபலங்கள் தங்களை குறித்த பெர்சனல் தகவல்களை எல்லாம் பொதுவெளியில் வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்களே அவதூறு வழக்கும் தொடர்கிறார்கள்.. நீதிமன்றம் என்பது எலோருக்கும் சமமான ஒன்று. அதனால் சமந்தாவின் வழக்கும் வரிசைப்படி முன்னுரிமை கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படும்” என்றும் கூறியுள்ளார்.