மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடு செக் குடியரசு. செக் மொழி பேசும் மக்களை கொண்ட இந்த நாட்டின் மக்கள் தொலை ஒரு கோடியே 40 லட்சம். இந்த குட்டி நாட்டில் ஆண்டுக்கு 10 திரைப்படங்கள் வரை தயாராகிறது. இந்த நாட்டின் திரைப்பட விழா சென்னையில் இன்றும், நாளையும் (அக்டோபர் 22, 23)நடக்கிறது. இதில் வுமன் ஆன் தி ரன், கொல்யா, என்ஜாய் தி வோர்ல்ட் வித் யூ என்ற புகழ்பெற்ற படங்கள் திரையிடப்படுகிறது.
இன்று மாலை நடக்கும் தொடக்க விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், செக் குடியரசின் இந்திய தூதர் மிலன் ஹவோர்கா, சென்னை துணை தூதர் ராம் அருண், நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். தாகூர் பிலிம் செண்டரில் நடக்கும் இதற்கான ஏற்பாடுகளை செக் தூதரகத்துடன் இணைந்து இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு செய்துள்ளது.