'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேரி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது | சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி |
சென்னை : நடிகர் சிம்புவின் வளர்ச்சியை தடுக்க சதி செய்வதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தாய் உஷா, போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் வசிப்பவர் மைக்கேல் ராயப்பன். முன்னாள் எம்.எல்.ஏ.,வான இவர், சினிமா படங்களை தயாரித்து வருகிறார். சிம்புவின் நடிப்பில், அன்பானவன் அசரவாதவன் அடங்காதவன் என்ற படத்தை தயாரித்தார். இப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு குறித்த நேரத்தில் வருவது இல்லை. கால்ஷீட் கொடுத்தபடி சிம்பு நடித்துக் கொடுக்கவில்லை. இதனால், காட்சிகள் சரியாக அமையவில்லை; படமும் ஓடவில்லை. எனக்கும், பட வினியோகஸ்தர்களுக்கும் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என, மைக்கேல் ராயப்பன் குற்றஞ்சாட்டி வந்தார்.
![]() |
சிம்புவுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் உள்ள பிரச்னை குறித்து, பல கட்ட பேச்சுக்கு பின், சிம்புவுக்கு எதிரான தடை நீக்கப்பட்டது. எனினும், மைக்கேல் ராயப்பனுடனான பிரச்னை தீர்ந்தபாடில்லை. இரு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை அடுக்கிய வண்ணம் உள்ளனர்.
![]() |