ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் | ''தமிழ் ஐசியூ.,வுல இருக்கு; எங்க போனாலும் தலைநிமிர்ந்து தமிழ்ல பேசுங்க'': செல்வராகவன் வலியுறுத்தல் | நடிகைகளே பொறாமைப்பட்ட நாயகி சில்க் ஸ்மிதா | உறவுகளின் மேன்மையைச் சொல்கிறதா 'மெய்யழகன்' டிரைலர் | ரஜினியின் வேட்டையன் படத்தின் முக்கிய கதைக்கரு வெளியானது! | பவன் கல்யாண் படத்தில் சிம்பு பாடிய பாடல் விரைவில் வெளியீடு | மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்! ஜெயம் ரவி விவகாரத்தில் களம் இறங்கிய பாடகி கெனிஷா!! | அக். 2ல் வெளியாகும் வேட்டையன் பட டிரைலர் | கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி | ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது |
தமிழ் இயக்குனரான ஷங்கர், தெலுங்கில் ராம் சரண் நடிக்க உள்ள 15வது படத்தை இயக்கப் போகிறார். இப்படத்தின் ஆரம்ப விழா கடந்த மாதம் ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தில் ஹிந்தி நடிகையான கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார் கியாரா.
“இது ஷங்கர் சாரின் படம். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என ஆவலுடன் காத்திருக்கிறேன். அவருடன் பணிபுரிவது எனக்குப் பிடித்த ஒன்று. நம்பமுடியாத ஒரு இயக்குனர். அவருடைய காலத்தில் முன்னோடியாக இருந்தவர். எனது கதாபாத்திரம் பற்றி சொல்ல முடியாது. ஆனால், போஸ்டரை வைத்து இது ஒரு அரசியல் படம் என சொல்வீர்கள்.
படத்தில் சர்ச்சையான விஷயங்கள் எதுவும் இல்லை. ஆனால், படத்தில் ஒரு அற்புதமான மெசேஜ் இருக்கிறது, அற்புதமான கதை இருக்கிறது, ஒரு பவர்புல்லான படமாக அமையும். ஷங்கர் சாரின் ஸ்டைலில் இப்படம் அமையும்,” எனத் தெரிவித்துள்ளார்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. நவம்பர் மாதம் முதல் கியாரா படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.