பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ் இயக்குனரான ஷங்கர், தெலுங்கில் ராம் சரண் நடிக்க உள்ள 15வது படத்தை இயக்கப் போகிறார். இப்படத்தின் ஆரம்ப விழா கடந்த மாதம் ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தில் ஹிந்தி நடிகையான கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார் கியாரா.
“இது ஷங்கர் சாரின் படம். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என ஆவலுடன் காத்திருக்கிறேன். அவருடன் பணிபுரிவது எனக்குப் பிடித்த ஒன்று. நம்பமுடியாத ஒரு இயக்குனர். அவருடைய காலத்தில் முன்னோடியாக இருந்தவர். எனது கதாபாத்திரம் பற்றி சொல்ல முடியாது. ஆனால், போஸ்டரை வைத்து இது ஒரு அரசியல் படம் என சொல்வீர்கள்.
படத்தில் சர்ச்சையான விஷயங்கள் எதுவும் இல்லை. ஆனால், படத்தில் ஒரு அற்புதமான மெசேஜ் இருக்கிறது, அற்புதமான கதை இருக்கிறது, ஒரு பவர்புல்லான படமாக அமையும். ஷங்கர் சாரின் ஸ்டைலில் இப்படம் அமையும்,” எனத் தெரிவித்துள்ளார்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. நவம்பர் மாதம் முதல் கியாரா படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.