விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், சிரஞ்சீவியின் உறவினருமான நடிகர் சாய் தரம் தேஜ், கடந்த மாதம் ஐதராபாத்தில் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கினார்.
அதன்பிறகு சுயநினைவை இழந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது காலர் போன் உடைந்ததாகவும், மேலும் காயங்கள் ஏற்பட்டதாகவும் சொன்னார்கள். கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார்.
தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளாராம். உடனடியாக தனது அடுத்த பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள சாய் விரும்பியதாகவும், ஆனால், அவரை இரண்டு மாதம் முழு ஓய்வு எடுக்கும்படி குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
இன்று அவருடைய பிறந்தநாளுக்கு முன்னதாகவே வீடு திரும்பியது குறித்து குடும்பத்தினரும், உறவினர்களும், ரசிகர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள். அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.