சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? | 'ஹீரோ மெட்டீரியல்' இல்லை என்ற கேள்வி... : அமைதியாக பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் | ஒரே நாளில் இளையராஜாவின் இரண்டு படங்கள் இசை வெளியீடு | நான் அவள் இல்லை : வித்தியாசமான கதாபாத்திரத்தில் நிகிலா விமல் | 27 வருடங்களுக்குப் பிறகு நாகார்ஜூனாவுடன் இணையும் தபு | பல்டி பட ஹீரோவின் படத்திற்கு சென்சாரில் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய படக்குழு | நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ‛கேஜிஎப்' நாயகி | 100 கோடி கொடுத்தாலும் சஞ்சய் லீலா பன்சாலியுடன் பணியாற்ற மாட்டேன் : இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் | தொடர்ந்து 'டார்கெட்' செய்யப்படும் பிரியங்கா மோகன் | 25 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 1 ரூபாய் அட்வான்ஸ் |
தியேட்டர்களுக்குப் போட்டியாக ஓடிடி தளங்களிலும் தொடர்ந்து புதிய படங்கள் வெளியாகி வருகின்றன. நாளை அக்டோபர் 14 ஆயுத பூஜையை முன்னிட்டு தியேட்டர்களில் 'அரண்மனை 3' படமும், ஓடிடி தளங்களில் 'உடன்பிறப்பே, விநோதய சித்தம்' ஆகிய படங்களும் வெளியாகின்றன.
இவற்றில் 'உடன்பிறப்பே' படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது அதிகப் படங்களில் நடித்து முடித்துள்ளவர்களில் சசிகுமாரும் ஒருவர். விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ் ஆகியோருடன் சசிகுமாரும் அதிகப் பட போட்டியில் உள்ளார்.
'எம்ஜிஆர் மகன், ராஜ வம்சம், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கமடா' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இவற்றில் 'ராஜவம்சம்' படம் நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. 'எம்ஜிஆர் மகன்' படத்தை எப்போதோ வெளியிட்டிருக்க வேண்டியது. ஆனால், கொரோனாவால் தள்ளிப் போனது. இப்போது படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட நல்ல விலைக்குக் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சசிகுமார் நான்கு படங்களில் நடித்து முடித்துள்ளதால் அப்படங்களை தியேட்டர்களில் வெளியிட சரியான தேதிகள் அமைய வாய்ப்பில்லை. எனவே, ஓடிடி தளத்தில் விற்று 'எம்ஜிஆர் மகன்' தயாரிப்பாளர் நல்ல லாபம் பார்த்துவிட்டார். அதை மற்ற சசிகுமார் படத் தயாரிப்பாளர்களும் தொடர்வார்களா அல்லது தியேட்டர்களில் வெளியிட சரியான இடைவெளிக்குக் காத்திருப்பார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.