ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
மலையாளத்தில் கிட்டத்தட்ட 100 படங்கள் நடித்துவிட்ட நடிகர் பிரித்விராஜ், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். மோகன்லாலை ஹீரோவாக வைத்து அவர் இயக்கிய அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று முதன் முதலில் 200 கோடி வசூலை ஈட்டிய மலையாள படம் என்கிற பெயரையும் பெற்றது. தற்போது அந்த படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்னொரு பக்கம் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கப்போவதாக கடந்த வருடம் அறிவித்திருந்தார் பிரித்விராஜ்.
இந்த நிலையில் தற்போது எம்பிரான் படத்திற்கு முன்னதாக மீண்டும் மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் உடன் அறிவித்துள்ளார் பிரித்விராஜ். லூசிபர் படத்தை தயாரித்த மோகன்லாலின் நண்பரான ஆண்டனி பெரும்பாவூரின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது