நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தற்போது சர்காரு வாரிபாட்டா என்ற படத்தில நடித்து வரும் மகேஷ்பாபு, இதனைத்தொடர்ந்து திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார். இதற்கான அறிவிப்பை கடந்த மாதமே வெளியிட்டனர். மேலும் இதற்கு முன்பு திரிவிக்ரம் இயக்கத்தில் நடித்துள்ள மகேஷ்பாபு, மீண்டும் மூன்றாவது முறையாக அவருடன் கைகோர்க்கப்போகிறார்.
இந்த படத்தில் மகேஷ்பாபு எந்த மாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்பதை திரிவிக்ரம் வெளியிடாதபோதும், இப்படத்தில் ரகசிய போலீஸாக மகேஷ்பாபு நடிப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு போக்கிரி என்ற படத்தில் இதுமாதிரியான வேடத்தில் தான் நடித்திருந்தார் மகேஷ்பாபு. அந்த படம் வெற்றி பெற்றது. அதனால் மகேஷ்பாபு ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தொடங்கும் என கூறப்படுகிறது.