ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
போக்கிரி, பிசினஸ்மேன் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத். தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் லிகர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். சினிமா மட்டுமின்றி அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வீடியோக்கள் மூலம் ஏதாவது ஒரு முக்கிய விசயத்தை பற்றி விவாதிப்பது இவரது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒவ்வொருவருடைய சோஷியல் மீடியா கணக்கையும், அவர்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டுமென ஒரு கோரிக்கை வைத்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நாளுக்கு நாள் சோஷியல் மீடியாவில், பிடிக்காதவர்களை ட்ரோல் செய்வதும் அவதூறு பரப்புவதும் அதிகரித்து வருகிறது சமீபத்தில் சோஷியல் மீடியாவில் பகிரப்பட்ட அன்னை தெரசாவின் புகைப்படத்திற்கு ஆயிரம் லைக்குகள் தான் வந்திருந்தன ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக 10,000 பேர் அந்த புகைப்படத்தை டிஸ்லைக் செய்திருந்தனர். யார் இவர்கள்? என்ன மாதிரி மனநிலை கொண்டவர்கள்? அன்னை தெரசாவின் பக்கத்தில் நிற்பதற்கே தகுதியில்லாத இவர்கள், டிஸ்லைக் செய்வதன் மூலம் என்ன வெளிப்படுத்த விரும்புகிறார்கள்?” என்று கேட்டுள்ளார் பூரி ஜெகன்நாத்.
இது போன்றவர்களின் சோஷியல் மீடியா கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும்போது தான், அவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்கிற விவரம் தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.